என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தற்போது தமிழில் சுந்தர். சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன்-2' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் 'மன சங்கர வர பிரசாத் கரு' என்ற படத்தின் நயன்தாரா முதல் தோற்றத்தையும் நேற்று வெளியிட்டுள்ளார்கள். அதில், நயன்தாராவின் கேரக்டர் பெயர் சசிரேகா என்று இடம்பெற்றுள்ளது. அதோடு பிரகாசமான மஞ்சள் நிற சேலையில், முத்து நெக்லஸ் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட பாரம்பரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் நயன்தாரா. கருப்பு கைப்பிடி கொண்ட குடையை ஏற்றியபடி ஒரு பண்டிகை பின்னணியில் காணப்படும் நயன்தாரா, நேர்த்தியையும் வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார். இப்படம் 2026ம் ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகிறது.