சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் | ஷங்கர் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்த அந்நியன் ஹிந்தி ரீமேக் டிராப்பா... | ஸ்ரீ லீலாவை பின்தொடரும் 11 மில்லியன் பேர் : இரண்டே மாதங்களில் 2 மில்லியன் அதிகரிப்பு | சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்த ஜோதிகா | ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஜூனியர் என்டிஆர் படம் | அசோக் செல்வனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்? | விமல் நடிப்பில் 'ஓம் காளி ஜெய் காளி' | பிரபாஸிற்கு ஜோடியாகும் பாக்யஸ்ரீ போஸ் | மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்க மறுத்த ஜீவா | ஆர்.டி.எக்ஸ் இயக்குனருடன் இணைந்த துல்கர் சல்மான் |
தெலுங்குத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் போசனி கிருஷ்ண முரளி. அவரை ஆந்திர போலீசார் திடீரென கைது செய்துள்ளனர். கடந்த ஆட்சியின் போது போசனி, பவன் கல்யாண் பற்றி பல்வேறு விதமான சர்ச்சைக்குரிய பேச்சுக்களைப் பேசியுள்ளார். பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் கமெண்ட் செய்துள்ளார்.
ஆட்சி மாறிய பின்பும் இதுவரையில் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஹைதராபாத், கச்சிபவுலியில் உள்ள போசனி வீட்டிற்குச் சென்ற அனந்த்பூர் போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர். அதன்பின் அவருக்கு மருத்துவ பரிசோதனைகளைச் செய்துள்ளனர்.
தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக போசனி ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அவரைக் கைது செய்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் அவரைக் கைது செய்துள்ளதாக போசனி மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
பவன் கல்யாணை திருப்திப்படுத்தவே இந்த நடவடிக்கையை சந்திரபாபு நாயுடு எடுத்துள்ளதாக ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அடுத்து பவன் கல்யாண் பற்றி அதிகமாகக் கமெண்ட் செய்த ராம்கோபால் வர்மா கைது செய்யப்படலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.