ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான மகேஷ்பாபு, ராம்சரண் இருவரும் தற்போது தங்களின் அடுத்தடுத்த படங்களின் வேளைகளில் பிஸியாக இருக்கின்றனர். ராஜமவுலி இயக்கத்தில் அடுத்ததாக மகேஷ்பாபு நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தன்னை தயார் படுத்திக் கொள்ளும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதேபோல ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் தான் நடித்து வரும் கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இவர்கள் இருவரும் தங்களது மனைவி, குழந்தைகளுடன் குடும்பமாக வெளிநாட்டு பயணங்கள் சென்று வந்துகொண்டு தான் இருந்தனர். இந்த நிலையில் ராம்சரண் மனைவி உபாசனா மற்றும் மகேஷ் பாபுவின் மனைவி நம்ரதா சிரோத்கர் ஆகியோர் தங்களது இன்னும் சில தோழிகளுடன் மாலத்தீவுக்கு ஜாலி ட்ரிப் கிளம்பி சென்றுள்ளனர். கணவர்கள் உள்ளூரில் வேலையில் பிஸியாக இருக்க, இவர்கள் மாலத்தீவில் தோழிகளுடன் ஜாலியாக பொழுதுபோக்கும் வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.