அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
மலையாள சினிமாக்களில் காமெடி வேடங்களில் நடித்து வருபவர் கூட்டிக்கல் ஜெயசந்திரன். ராசலீலா, சாந்துப்பொட்டு, திளக்கம், சிரிக்குடுக்கா, வர்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். 48 வயதான இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த இவர், கோழிக்கோட்டில் உள்ள தனது உறவினர் ஒருவர் வீட்டுக்கு விருந்தினராக சென்றிருந்தபோது அங்கு பக்கத்து வீட்டில் இருந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு கசபா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக கூறி சிறுமியின் பெற்றோர் கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் மற்றும் கேரள டிஜிபியிடம் புகார் செய்து உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் ஜெயச்சந்திரன் கைது செய்ப்படுவார் என்று போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.