மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான முன்னணி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் கவனம் செலுத்திய அவர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அதே சமயம் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்த சுரேஷ் கோபி, சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கேரளாவில் பா.ஜ.,விற்கு எம்.பி.,க்களே இல்லை என்கிற நிலையில் முதன்முதலாக அந்த பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார் சுரேஷ்கோபி.
அவரது வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் சுரேஷ்கோபியும் நண்பருமான மம்முட்டி, சுரேஷ்கோபி நடிக்க உள்ள அடுத்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கிறது என்கிற அறிவிப்பை சூட்டோடு சூடாக வெளியிட்டு தனது வாழ்த்துகளை சுரேஷ்கோபிக்கு தெரிவித்துள்ளார். இந்த படத்தை யார் இயக்க உள்ளார்கள், மேலும் இதில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் யார் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.