தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் |
தமிழ்த் திரையுலகத்தைப் போலவே தெலுங்குத் திரையுலகமும் இந்த ஆண்டில் இதுவரையில் வசூல் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவுக்காவது ஒரே ஒரு 'அரண்மனை 4' படம் கிடைத்தது. ஆனால், தெலுங்கில் அப்படி ஒரு படம் கூட அமையவில்லை. இருந்தாலும் 'கல்கி 2898 எடி, புஷ்பா 2, தேவரா' என சில பெரிய படங்கள் அங்கு வர இருப்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
இருந்தாலும் இனிமேல் அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் ஆகியவற்றை நடத்த அனுமதிக்கப் போவதில்லை என தெலுங்கானா தியேட்டர்காரர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். இந்த திடீர் முடிவு தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அதிகாலைக் காட்சிகள், ரசிகர் மன்றக் காட்சிகள் மூலம் தயாரிப்பாளர்களுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வந்தது. நடிகர்களுக்கும் ஒரு ஓபனிங் கிடைக்கக் காரணமாக இருந்தது. இந்நிலையில் தெலுங்கானா தியேட்டர்காரர்களின் முடிவு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் ஏற்கனவே அதிகாலை காட்சிகள் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுவிட்டன. காலை 9 மணிக்கு மேல்தான் இங்கு காட்சிகள் நடைபெறுகிறது.