துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு |
ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல் : தி கோர்' மலையாள படம் நாளை மறுநாள் (23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொச்சியில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டியிடம் செய்தியாளர்கள் ஆன் லைன் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர் “திரைப்படங்களை பார்த்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ, மற்றவர்களின் உந்துதல் காரணங்களாகவோ இருக்கக் கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அதேபோல, ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
ஆனால் மம்முட்டியின் கருத்தோடு இயக்குனர் ஜியோ பேபி ஒத்துப்போகவில்லை. “இன்றைக்கு பல ஆன்லைன் கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகிவிட்டனர். என்னை பொறுத்தவரை நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை. ஆன்லைன் விமர்சனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். பேட்டியின் போது ஜோதிகா உடன் இருந்தார்.