தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ஜியோ பேபி இயக்கத்தில் மம்மூட்டி, ஜோதிகா நடித்துள்ள 'காதல் : தி கோர்' மலையாள படம் நாளை மறுநாள் (23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கொச்சியில் நடந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்மூட்டியிடம் செய்தியாளர்கள் ஆன் லைன் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த அவர் “திரைப்படங்களை பார்த்து யார் வேண்டுமானாலும் விமர்சனம் செய்யட்டும். ஒவ்வொரு தனிநபருக்கும் அவரது கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால், அது அவர்களின் சொந்தக் கருத்துக்களாக இருக்க வேண்டும். வெளிப்புற அழுத்தங்களாலோ, மற்றவர்களின் உந்துதல் காரணங்களாகவோ இருக்கக் கூடாது. ஆன்லைன் விமர்சனங்களை தடை செய்வதால் திரையுலகை காப்பாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை. அதேபோல, ஒரு படத்தின் முடிவு என்பது ஆன்லைன் விமர்சனங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார்.
ஆனால் மம்முட்டியின் கருத்தோடு இயக்குனர் ஜியோ பேபி ஒத்துப்போகவில்லை. “இன்றைக்கு பல ஆன்லைன் கன்டென்ட் கிரியேட்டர்கள் உருவாகிவிட்டனர். என்னை பொறுத்தவரை நான் ஆன்லைன் சினிமா விமர்சனங்களை பொருட்படுத்துவதில்லை. ஆன்லைன் விமர்சனங்களை வரைமுறைப்படுத்த வேண்டும்” என்றார். பேட்டியின் போது ஜோதிகா உடன் இருந்தார்.