அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கேரளாவில் நேற்று முன்தினம் இளம் பெண் மருத்துவர் ஒருவர் மருத்துவமனையில் கத்தியால் குக்கி கொல்லப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டாரக்கராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் வந்தனா தாஸ். சமீபத்தில் தான் மருத்துவ படிப்பை முடித்த இவர் இங்கு டாக்டராக பணியாற்றி வந்த நிலையில் நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்ட ஒரு இளைஞரை போலீசார் பிடித்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுப்பதற்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
அப்போது அங்கிருந்த காவலர்களை தாக்கி விட்டு தப்பித்து ஓட முயன்ற அந்த நபர் எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டாக்டர் வந்தனாவை கத்தியால் பலமுறை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே வந்தனா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வந்தனாவின் மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி வந்தனாவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று வந்தனாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது பெற்றோர் மோகன்தாஸ் மற்றும் வசந்தகுமாரி ஆகியோருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்தார். மம்முட்டியுடன் அவரது ஆஸ்தான தயாரிப்பாளரான ஆண்டோ ஜோசப் மற்றும் நடிகர் ரமேஷ் பிஷரோடி ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.