லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் ஜெயராஜ். தமிழில் பரத் நடித்த போர் ஸ்டுடென்ட்ஸ் படத்தை இயக்கியதுடன் அதில் நடிகர் நரேனை அறிமுகப்படுத்தியதும் இவர் தான். கடந்த வருடம் இவர் மலையாளத்தில் இயக்கிய 19 ஆம் நூற்றாண்டு திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது சுரேஷ்கோபி நடித்து வரும் ஒரு பெரும களியாட்டம் என்கிற படத்தை இயக்கி வருகிறார் ஜெயராஜ்.
கடந்த 1997ல் ஜெயராஜ் இயக்கத்தில் களியாட்டம் என்கிற படத்தில் நடித்திருந்தார் சுரேஷ்கோபி. இந்த படத்திற்காக சுரேஷ்கோபிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது. அதன்பிறகு 2006ல் இவர்கள் கூட்டணி அஸ்வரூதன் என்கிற படத்திற்காக இணைந்தது தற்போது 17 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படம் களியாட்டத்திற்கும் இந்த படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் என இயக்குனர் கூறினாலும் அதன் இரண்டாம் பாகமாக தான் இந்த படம் உருவாகிறது என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.