கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… |
படம் : ஐயா
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சரத்குமார், நயன்தாரா, நெப்போலியன், பிரகாஷ்ராஜ்
இயக்கம் : ஹரி
தயாரிப்பு : கவிதாலயா
தமிழ் வழியே இயக்குனரான ஹரி, சாமி படத்தில் அதிரிபுதிரி, ஹிட் அடித்தார். அடுத்து இயக்கிய, ஐயா படத்தில், அமைதியான வெற்றியை பெற்றார். இக்கதை, ரஜினிக்காக உருவாக்கப்பட்டது. சில காரணங்களால், அவர் நடிக்க மறுக்க, சரத்குமார், உள்ளேன் ஐயா என, நுழைந்தார்.
திருநெல்வேலியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், சரத்குமார் இரட்டை வேடத்தில் கலக்கியிருந்தார். கடந்த, 1970-களில் நடப்பதாக கதை துவங்குகிறது. சரத்குமாரும், நெப்போலியனும் நண்பர்கள். அக்காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாட, எம்.எல்.ஏ.,வான, ஓ.ஏ.கே.சுந்தர், மக்களுக்காக அரசு கொடுத்த அரிசியை பதுக்கி வைக்கிறார். இது தொடர்பான பிரச்னையில் சுந்தரை, சரத்குமார் கொல்கிறார். அவரின் மகனான பிரகாஷ்ராஜ், தன் தந்தையின் கொலைக்கு பழிவாங்க காத்திருக்கிறார். தன் நயவஞ்சகத்தால் நெப்போலியனை, சரத்குமாருக்கு எதிராக திருப்பி விடுகிறார். அதிலிருந்து சரத்குமார் மீண்டாரா, கொலை செய்ததற்கான தண்டனையை அனுபவித்தாரா என்பது தான், திரைக்கதை.
ஏரியை துார் வார, சரத்குமார் கணக்கு சொல்லும் காட்சி, பிரகாஷ்ராஜ் இறந்தது போல நடிக்கும் காட்சிகள், ரசிக்க செய்தன. இப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார், நடிகை நயன்தாரா. குடும்ப பாங்கான நயன்தாராவை, தமிழக மக்கள் வரவேற்றனர். கதாநாயகியாக முதலில் நடிக்கவிருந்தது, ஜோதிகா. பிரகாஷ்ராஜின் வில்லத்தனமும், கிளைமேக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனமும், கைத்தட்டல் பெற்றது. வடிவேலுவின் நகைச்சுவை, படத்திற்கு பலம் சேர்த்தது. பரத்வாஜ் இசையில், ஒரு வார்த்தை பேச, அய்யாத்துரை நீ பல்லாண்டு... உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க செய்தன.
குடும்பத்துடன் பார்க்க, ஐயா அழகானவர்!