ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
படம் : ஐயா
வெளியான ஆண்டு : 2005
நடிகர்கள் : சரத்குமார், நயன்தாரா, நெப்போலியன், பிரகாஷ்ராஜ்
இயக்கம் : ஹரி
தயாரிப்பு : கவிதாலயா
தமிழ் வழியே இயக்குனரான ஹரி, சாமி படத்தில் அதிரிபுதிரி, ஹிட் அடித்தார். அடுத்து இயக்கிய, ஐயா படத்தில், அமைதியான வெற்றியை பெற்றார். இக்கதை, ரஜினிக்காக உருவாக்கப்பட்டது. சில காரணங்களால், அவர் நடிக்க மறுக்க, சரத்குமார், உள்ளேன் ஐயா என, நுழைந்தார்.
திருநெல்வேலியை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படத்தில், சரத்குமார் இரட்டை வேடத்தில் கலக்கியிருந்தார். கடந்த, 1970-களில் நடப்பதாக கதை துவங்குகிறது. சரத்குமாரும், நெப்போலியனும் நண்பர்கள். அக்காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாட, எம்.எல்.ஏ.,வான, ஓ.ஏ.கே.சுந்தர், மக்களுக்காக அரசு கொடுத்த அரிசியை பதுக்கி வைக்கிறார். இது தொடர்பான பிரச்னையில் சுந்தரை, சரத்குமார் கொல்கிறார். அவரின் மகனான பிரகாஷ்ராஜ், தன் தந்தையின் கொலைக்கு பழிவாங்க காத்திருக்கிறார். தன் நயவஞ்சகத்தால் நெப்போலியனை, சரத்குமாருக்கு எதிராக திருப்பி விடுகிறார். அதிலிருந்து சரத்குமார் மீண்டாரா, கொலை செய்ததற்கான தண்டனையை அனுபவித்தாரா என்பது தான், திரைக்கதை.
ஏரியை துார் வார, சரத்குமார் கணக்கு சொல்லும் காட்சி, பிரகாஷ்ராஜ் இறந்தது போல நடிக்கும் காட்சிகள், ரசிக்க செய்தன. இப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார், நடிகை நயன்தாரா. குடும்ப பாங்கான நயன்தாராவை, தமிழக மக்கள் வரவேற்றனர். கதாநாயகியாக முதலில் நடிக்கவிருந்தது, ஜோதிகா. பிரகாஷ்ராஜின் வில்லத்தனமும், கிளைமேக்ஸ் காட்சியில் அவர் பேசும் வசனமும், கைத்தட்டல் பெற்றது. வடிவேலுவின் நகைச்சுவை, படத்திற்கு பலம் சேர்த்தது. பரத்வாஜ் இசையில், ஒரு வார்த்தை பேச, அய்யாத்துரை நீ பல்லாண்டு... உள்ளிட்ட பாடல்கள் ரசிக்க செய்தன.
குடும்பத்துடன் பார்க்க, ஐயா அழகானவர்!