என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |
சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் மத்தியில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து நடிகர் நடிகைகளிடம் போதை ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மூத்த மகன் ஆர்யான்கான் தனது ஆண்-பெண் நண்பர்களுக்கு மும்பை கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த உல்லாச கப்பலில் போதை பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட போதை பொருட்களை அவர்கள் பயன்படுத்தியதை கண்டு பிடித்துள்ளனர்.
இதையடுத்து ஷாரூக்கான் மகன் ஆர்யான்கானின் மொபைல் போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்த 6 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். அதோடு ஆர்யான்கானுக்கும் இந்த போதை கடத்தலுக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது ஷாரூக்கான், அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.