டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாலிவுட்டில் பிரபலமான ஜோடியாக விளங்குகிறார்கள் ரன்பீர் கபூர் - ஆலியா பட் ஜோடி. ரன்பீர் கபூரின் 29வது பிறந்தநாள் விழா அண்மையில் நடந்தது. இந்த பிறந்த நாளையொட்டி தன்னுடைய காதலர் ரன்பீர் கபூருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருக்கும் ஒரு மலைப்பகுதி ரிசார்ட்டை ஆலியா பட் புக் செய்திருக்கிறார். கிரானைட் கற்களால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட இந்த அழகான அருமையான ரிசார்ட், பார்ப்பதற்கே கொள்ளை அழகுடன் விளங்குகிறது. இப்பகுதியின் மலைவாழ் மக்களின் வாழ்வியல் அனுபவங்கள் கிடைக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த ரிசார்ட், இங்கு தங்குபவர்களுக்கு ஒரு வைல்டு அனுபவம் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஒரு இரவுக்கு சுமார் ரூ.1 முதல் ரூ. 1 1/2 லட்சம் என்று கூறப்படும் இந்த ரிசார்ட்டில்தான், ஆலியா பட், தன் காதலர் ரன்பீர் கபூர் புக் செய்திருக்கிறார். மேலும் ரன்பீர் கபூருடன் கடற்கரையோரம் சென்று ஆலியா பட், தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து 'ஹேப்பி பர்த்டே மை லைப்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே இவர்கள் இருவரும் ஜோத்பூர் விமான நிலையத்திற்கு வந்தடைந்த புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகின்றன. இந்த நிலையில் தன்னுடைய காதலருக்காக இப்படி ஒரு ரிசார்ட் புக் பண்ணி இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆலியா பட்டின் நெகிழ்ச்சி செயல், நெட்டிசன்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.