காஜல் அகர்வால் இயக்குனர் ஆகிறாரா? | த.வெ.க.,வில் இணைகிறாரா அர்ஜூன்? உண்மை என்ன? | திரையுலகில் 50 ஆண்டுகள்: பாக்யராஜ்க்கு பாராட்டு விழா | என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? |
ஏ.எல். விஜய் இயக்கிய தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வரும் கங்கனா ரணாவத், தற்போது சமந்தா - நாகசைதன்யா பிரிந்து விட்டதாக அறிவித்ததை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், விவாகரத்து என்றாலே தவறு ஆணின் பக்கம்தான் இருக்கும். பெண்களை ஆடைகளை போன்று பயன்படுத்தி எறிந்து விட்டு பின்னர் அவர்களை தங்கள் நண்பர்கள் போல் என்று கூறிக்கொள்கிறார்கள். நூற்றில் ஒரு பெண் வேண்டுமானால் தவறு செய்யலாம். மேலும், இதுபோன்ற நடிகர்களை ரசிகர்களும் ஊடகங்களும் ஊக்கப்படுத்துவது வெட்கக்கேடானது. நடிகர்களை நியாயப்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரிக்கிறார்கள். இந்தமாதிரி விவாகரத்து என்பது முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருகிறது என்று நாகசைதன்யாவை விமர்சனம் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.
அதோடு நில்லாமல், தற்போது அமீர்கான் நடிக்கும் படம் மூலம் ஹிந்தியில் நாகசைதன்யா அறிமுகம் ஆவதையும் குறிப்பிட்டு அமீர்கானையும் விமர்சித்துள்ளார் கங்கனா. அதாவது, இந்த நடிகர் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க் கையை அழித்தார். அப்படிப்பட்டவர் இப்போது நாக சைதன்யாவுக்கு பாலிவுட்டில் வழிகாட்டும் ஒளியாகியிருக்கிறார் என்று அமீர்கானையும் விமர்சனம் செய்திருக்கிறார் கங்கனா ரணாவத்.