டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார் ஹிந்தி சினிமாவில் முடிசூடா மன்னராக திகழ்ந்தார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.
பாகிஸ்தானில் உள்ள பெஷாவார் பகுதியில் 1922ம் ஆண்டு பிறந்த முகம்மது யூசுப் கான் தான் சினிமாவில் திலீப் குமார் என்கிற பெயரில் பிரபலமானார். ஹிந்தி சினிமாவின் இப்போதைய முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாருக்கான், அமீர்கானுக்கெல்லாம் முன்பே பாலிவுட்டின் முதல் கான் நடிகர் என்கிற பெருமைக்குரியவராக திலீப் குமார் திகழ்ந்தார். அண்டாஸ், ஆன், தேவதாஸ், கங்கா ஜமுனா, ராம் அவுர் ஷியாம் என ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ளவர், கடைசியாக 1998ம் ஆண்டு கில்லா எனும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.