உதட்டில் முத்தம் - சர்ச்சையில் பாடகர் உதித் நாராயண் | பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை வைரல் கிளிக்ஸ் | உலக தரத்தில் எம்புரான் டீசர் ; பிரபாஸ் பாராட்டு | கந்தன் கருணை, மௌனம் பேசியதே, மாஸ்டர் - ஞாயிறு திரைப்படங்கள் | 32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். காதல் மன்னனாக அண்டாஸ் (1949), முரட்டு அடியாளாக ஆன் (1952), நாடக பாணி படமான தேவதாஸ் (1955), நகைச்சுவை நாயகனாக ஆஜாத் (1955), சரித்திரக் காதலனாக முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக படமான கங்கா ஜமுனா (1961) என திலீப் குமார் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
1970களில் புதிய நடிகர்களின் வரவால் அவருக்கு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார். 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து குணச்சித்திர பாத்திரங்களில் ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) உள்ளிட்ட படங்களில் வயது முதிர்ந்த குடும்ப தலைவர், போலீஸ் அதிகாரி என தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்தார்.