ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! | எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு படத்திற்காக பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவ்வளவு? | நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! |
2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் பின்னணியில் உருவான வெப் சீரிஸ் ஸ்டேட் ஆப் ஸீஜ்: 26/11. ஜீ 5 தளத்தில் வெளியானது. தற்போது இரண்டாவது சீசன் ஸ்டேட் ஆப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இது குஜராத்தில் கோவிலில் பக்தர்களை பணயக் கைதிகளா சிறைபிடித்த தீவிரவாதிகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்றிய இந்திய ராணு வீரர்களின் கதை. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜீ5ல் நாளை (ஜூலை 9) வெளிவருகிறது.
இதில் அக்ஷய் கண்ணா ஹீரோவாக நடித்துள்ளார். என் எஸ் ஜி கமாண்டோவாக விவேக் தாஹியா தனது கதாபாத்திரத்தை தொடர்கிறார். மேலும் கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி பட்னிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். கென் கோஷ் இயக்கி உள்ளார். ஓய்வுபெற்ற கர்னல் சுந்தீப் சென் இதற்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் மும்பை தாக்குதலின் போது இரண்டாம் கட்ட என் எஸ் ஜி தலைவராக இருந்தவர்.
இதுகுறித்து இயக்குனர் கென் கோஷ் கூறியிருப்பதாவது: இது வெறும் படம் அல்ல. நம்மைக் காக்க என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என் எஸ் ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. டெம்பிள் அட்டாக் திரைப்படத்தில் நமது நாயகர்களுக்கு உரிய, சரியான ஒரு அஞ்சலியைத் தர நாங்கள் முயற்சித்திருக்கிறோம் .என்றார்.