ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் | ஆள் வச்சி அடிச்ச மாதிரி டார்ச்சர் இருந்தது: 'தலைவன் தலைவி' படப்பிடிப்பு அனுபவம் குறித்து விஜய் சேதுபதி |
கடந்த 2014ல் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் பீகே. ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவான இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆமிர்கான் நாயகனாக நடித்திருந்தார். அனுஷ்கா சர்மா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் ஒருபக்கம் உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றது என்றால், இன்னொரு பக்கம் இந்து கடவுள்களை இழிவுபடுத்தி விட்டதாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பையும் சம்பாதித்தது. அதேசமயம் வசூலையும் வாரி குவித்தது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் ஒரிஜினல் நெகடிவ்வை சமீபத்தில் இந்திய தேசிய திரைப்பட காப்பகம் (NFAI) வசம் ஒப்படைத்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இதுபற்றி அவர் கூறும்போது, “ஒவ்வொரு இயக்குனரும் தங்களது படத்தின் ஒரிஜினல் நெகடிவ்வை தமக்குப்பின் வரும் சந்ததியினருக்காகவும் திரைப்பட உருவாக்கம் குறித்து கற்கும் அடுத்த தலைமுறை மாணவர்களுக்காகவும் பாதுகாத்து வைக்க வேண்டியது அவர்களுடைய கடமை.. மற்ற இயக்குனர்களுக்கும் இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்” என கூறியுள்ளார்.