ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி, குஷி இருவரும் அப்பாவுடன் மும்பையில் வசித்து வருகிறார்கள். ஜான்வி ஹிந்தித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை தெலுங்குப் படங்களில் நடிக்க வைக்க வேண்டுமென பலரும் முயற்சித்து வருகிறார்கள்.
நடிகையாக இருந்தாலும் ஜான்வி கடந்த சில வாரங்களாகவே மும்பை வீதிகளில் சைக்கிளிங் சென்று வருகிறார். அவருடன் தங்கை குஷி மற்றும் சில நண்பர்கள் வருகிறார்கள். பிஸியான வீதிகளில் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு, ஹெட்போன் மாட்டிக் கொண்டு சைக்கிளிங் செல்லும் ஜான்வியை 'பப்பராசி' புகைப்படக்காரர்கள் விடாமல் துரத்திச் சென்று புகைப்படம் எடுக்கிறார்கள்.
அவர்களிடம் “இது ஆபத்தானது, இப்படியெல்லாம் எடுக்காதீர்கள்,” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அவருடைய தங்கை குஷியும் அவர்களிடம், “எங்களுக்கும் கொஞ்சம் தனிமையைக் கொடுங்கள்,” என்று கேட்கிறார். அவர்கள் இருவரும் இப்படி பேசும் வீடியோ பதிவை ஒரு பிரபல புகைப்படக்காரர் அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுளளார். அதையே 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள்.
பாலிவுட்டில் 'பப்பராசி' புகைப்படமெடுப்பவர்கள் நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் வழக்கமாக செல்லும் இடங்களில் பல புகைப்படக்காரர்கள் காத்திருப்பார்கள்.