சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடிப்பில் ஒரு புலனாய்வு த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் புட்டேஜ். ஷைஜு ஸ்ரீதரன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலர் கடந்த வெள்ளியன்று வெளியானது. இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், இயக்குனரும் சமீபத்தில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவருமான அனுராக் காஷ்யப் இந்த படத்தை தான் வழங்கப் போவதாக கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், “கடந்த ஒரு வருடமாக மலையாள திரை உலகில் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தும் விதமான படங்கள் வெளியாகி வருகின்றன. அவர்கள் மீண்டும் புதிய ஜானர்களை கண்டுபிடிக்கிறார்கள். புதிய ஐடியாக்களை முயற்சிக்கிறார்கள். அந்தவகையில் இந்த புட்டேஜ் திரைப்படத்திலும் ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்கள் என்பதுடன் அது உண்மையிலேயே ஒர்க்அவுட்டும் ஆகி இருக்கிறது. இந்தப் படத்துடன் என்னை இணைத்துக் கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு தனது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ள மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ள பதிவில், “வழக்கமான பாணியை உடைத்து புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு புரட்சிகரமான படங்களை கொடுக்கும், என்னுடைய பேவரைட்டுகளில் ஒருவரான அனுராக் காஷ்யப் இந்தப் படத்துடன் இணைந்துள்ளார் என்கிற செய்தியை கேட்டு என்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகள் இல்லாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். ஒரு இயக்குனராக இப்படி ஒரு படத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கு புட்டேஜ் படத்தை விட சிறந்த படம் இருக்க முடியாது” என்று கூறியுள்ளார்.