சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த மாதம் கூட காந்தாரா திரைப்படத்தை கேரளாவில் வெளியிடுவதில் பங்கு சதவீதம் பிரிப்பதில் அந்தப்படத்தை வெளியிட்ட நடிகர் பிரித்விராஜின் தயாரிப்பு நிறுவனத்துடன் கெடுபிடி காட்டி அதன்பிறகு ஒருவழியாக சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த ரசிகா மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் மனோஜ் என்பவர் கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் மீது நடவடிகை எடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் முறையற்ற நடவடிக்கைகளை கடைபிடித்து வருகிறது. 2013 முதல் 2023 வரையிலான தங்களது பண வரவை முறைகேடான முறையில் பயன்படுத்தி இருக்கிறது. இது குறித்து மாவட்ட பதிவாளர் நடத்திய விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளதுடன் இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட கோரிக்கை வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட இரு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இது குறித்து விளக்கம் அளிக்க கேரள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.