'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

அலை, கேங் லீடர், யாவரும் நலம், மனம், 24 (சூர்யா படம்) போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கி பெயர் பெற்றவர் விக்ரம் குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக 2022ம் ஆண்டில் 'தேங் யூ' படம் வெளியானது. இந்த படம் தோல்வி அடைந்ததால் அதன்பின் விக்ரம் குமாரின் அடுத்த படம் குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
கடந்த சில மாதங்களாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் நடிகர் நிதினை வைத்து விக்ரம் குமார் படம் இயக்குவதற்காக பேச்சுவார்த்தையில் உள்ளார் என செய்தி வெளியானது, ஆனால் நடக்கவில்லை. இந்நிலையில் நிதினுக்கான கதையை விக்ரம் குமார் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை சந்தித்து கூறியுள்ளார். விஜய் தேவரகொண்டாவும் இந்த கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்து கூடுதலாக இந்த படத்தை தயாரிக்க யு.வி கிரியேஷன்ஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.