தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பொழுது போக்கிற்கானது திரைப்படம் என்பதை தன் பாடல்களால் பொருள் நிறைந்ததாக மாற்றியவர் கண்ணதாசன். அனைத்து மத கடவுள்கள், சரித்திர நாயகர்கள், புராண இதிகாச வேந்தர்கள், மாந்தர்களை இவரது பாடல்கள் நம் கண் முன் கொண்டு வந்தன. எம்.எஸ்.விஸ்வநாதன் நாதம் என்றால், கண்ணதாசன் கீதம். கே.வி.மகாதேவன் தேவராகம் என்றால், கண்ணதாசன் தேவகானம். இம்மூவேந்தர்களின் காலம் தமிழ் திரைக்கு மட்டுமல்ல; தமிழ் மொழியின் பொற்காலமும் கூட.
கண்ணதாசனின் நினைவு நாள் இன்று(அக்., 17) இதுதொடர்பாக நடிகர் கமல் வெளியிட்ட பதிவில், ‛‛அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும். எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள். என்றென்றும் உங்கள் நான்'' என குறிப்பிட்டு, அவருடன் இருந்த போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
கண்ணதாசன் எழுதிய கடைசி பாடல், கமலின் மூன்றாம் பிறை படத்தில் வரும் ‛கண்ணே கலைமானே...'' பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.