'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2014ல் வெளியான பாகுபலி முதல் பாகம் மற்றும் 2017ல் வெளியான பாகுபலி இரண்டாவது பாகம் இரண்டுமே மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றன. சொல்லப்போனால் இப்போது மிகப்பெரிய படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவதற்கு பாகுபலி படத்தின் வெற்றி தான் உந்துதலாக அமைந்தது. இப்போதும் பாகுபலி படத்திற்கு என ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் தான் பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து ஒரே படமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.
அந்த வகையில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடிய இந்த இரண்டு பாகங்களையும் ஒன்றிணைத்து 3 மணி 44 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரே படமாக பாகுபலி ; தி எபிக் என்கிற பெயரில் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் சென்சார் அதிகாரிகளின் பார்வைக்கு இந்த படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். .
வரும் அக்-31ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஐந்தரை மணி நேர படத்தை மூன்றே முக்கால் மணி நேரமாக மாற்றி இருப்பதால் என்ன மாற்றங்களை இதில் செய்திருப்பார்கள் என்று பார்க்கும் ஆவல் இயல்பாகவே ரசிகர்களுக்கு ஏற்படும் என்பதால் நிச்சயம் இந்த பாகுபலி தி எபிக் படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பும் வெற்றியும் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.