விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
ஆன்மிக மற்றும் தியான அமைப்பு 'வாழும் கலை'.இதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர். இவர் பல அமைப்புகளின், நாடுகளின் நல்லெண்ண தூதராகவும் இருந்து வருகிறார்.
கொலம்பியாவில் அரசுக்கும், புரட்சிகர ஆயுத முன்னணி என்ற அமைப்புக்கும் 50 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்தப்போர் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் கடந்த சில வருடங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர். இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார்.
இந்த அமைதிப் பணியின்போது அவர் சந்தித்த அனுபவங்கள் தற்போது திரைப்படமாகிறது. திரில்லர் பாணியில் உருவாகும் இதை ஹிந்தியில் பதான், வார், பைட்டர் படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இயக்குகிறார். மகாவீர் ஜெயின் தயாரிக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முடிவடைந்திருக்கிறது. இதில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள்.