அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' | பிளாஷ்பேக் : சொந்த வாழ்க்கை கதையில் நடித்த சுதா சந்திரன் | பிளாஷ்பேக் : பத்மினி சகோதரிகள் போல், நாட்டியத்தில் ஜொலித்த சாயி சகோதரிகள் |

பதான், ஜவான் படங்களின் பெரிய வெற்றி ஆயிரம் கோடியை தாண்டிய வசூல் இவற்றால் இந்தியாவின் நம்பர் ஒன் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். சமீப ஆண்டுகளாக சரிந்து கிடந்த பாலிவுட் சினிமாவை இந்த இரண்டு படங்களும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று ஷாரூக்கான் மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. “முழு நேரமும் ஷாரூக்கானுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரிடம் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கிளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஷாரூக்கான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் செல்வார்கள். இது தவிர ஷாரூக்கான் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 4 போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்” என்று சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.