சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | அமெரிக்க பிரீமியரில் பவன் கல்யாணின் ஓஜி படம் செய்த சாதனை! | எண்ணம் போல் வாழ்க்கை என்பது என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது! -இட்லி கடை டிரைலர் விழாவில் தனுஷ் பேச்சு | ஷேன் நிகாமிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்: சாந்தனு | பவன் கல்யாண் படத்திற்கு சலுகைகளை அள்ளி வழங்கிய ஆந்திர அரசு | பிளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு முன்பே பிகினியில் கலக்கிய ஜெயஸ்ரீ | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் ஆதிக்கம் செலுத்திய சி.ஆர்.ராஜகுமாரி | அவர்களை பிதுக்கணும். மசாலா தடவணும்... சமூகவலைதள பார்ட்டிகள் மீது கோபமான வடிவேலு | கவர்ச்சி உடைகளுக்கு வரும் விமர்சனம் குறித்து கவலை இல்லை! - நடிகை வேதிகா | மலையாளத்தில் அறிமுகமாவதை உறுதிபடுத்திய டிஎஸ்கே! |
பதான், ஜவான் படங்களின் பெரிய வெற்றி ஆயிரம் கோடியை தாண்டிய வசூல் இவற்றால் இந்தியாவின் நம்பர் ஒன் நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். சமீப ஆண்டுகளாக சரிந்து கிடந்த பாலிவுட் சினிமாவை இந்த இரண்டு படங்களும் தூக்கி நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவரது பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. மிரட்டல்களும் அதிகரித்துள்ளது. இதனால் தனக்கு பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று ஷாரூக்கான் மகாராஷ்டிர அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்தார்.
இதை தொடர்ந்து அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. “முழு நேரமும் ஷாரூக்கானுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்குவார்கள். பாதுகாப்புக்காக செல்லும் போலீசாரிடம் எம்பி 5 எந்திர துப்பாக்கிகள். ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கிளோக் பிஸ்டல்கள் இருக்கும். ஷாரூக்கான் வெளியில் எங்கு சென்றாலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடன் செல்வார்கள். இது தவிர ஷாரூக்கான் வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 4 போலீஸ் கமாண்டோக்கள் பாதுகாப்புக்கு நிறுத்தப்படுவார்கள்” என்று சிறப்பு ஐ.ஜி. திலீப் சாவந்த் தெரிவித்துள்ளார்.