இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
1997ம் ஆண்டு தமிழிலில் முதல்முறையாக அறிமுகமான ஐஸ்வர்யா ராய் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பாலிவுட்டில் பிரபலமடைந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்தாண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய்யின் கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நாசிக் மாவட்டத்தில் உள்ள சின்னாரில் ஐஸ்வர்யா ராய் பெயரில் ஒரு ஹெக்டேர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த ஓராண்டாக நில வரி செலுத்தாததை தொடர்ந்து, நாசிக் மாவட்ட வருவாய்த்துறை ஐஸ்வர்யா ராய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் நில வரி செலுத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அப்பகுதியில் நில வரி செலுத்தாத 200க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.