26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு |

ஷாருக்கான் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் என்பவர் இயக்கி உள்ளார். தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, ஜான் ஆபிரகாம் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பேஷ்ரங் என்கிற பாடல் பரபரப்பான சர்ச்சையை கிளப்பியதுடன் படத்திற்கு கூடுதல் பப்ளிசிட்டியையும் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் கூறும்போது, தான் எப்போதும் படங்களில் சண்டைக் காட்சியை வைப்பதற்கு அதிகம் விரும்புவதாக கூறியுள்ளார்.
அந்த வகையில் பதான் படத்தில் பைக் சண்டை காட்சிகளும் ஓடும் ட்ரெயின் மேல் நடக்கும் சண்டை காட்சிகளும் ரசிகர்களுக்கு திரில்லிங்காக இருக்கும் என்று கூறியுள்ளார். அதுமட்டுமல்ல இந்த படம் உளவுத்துறை வீரர் மற்றும் தீவிரவாதிகள் ஆகியோருக்கு இடையே நடைபெறும் போராட்டம் சம்பந்தப்பட்ட கதை என்பதால் இந்த படத்திற்காக ஷாருக்கானும் அவருடன் இணைந்து பயணிக்கும் தீபிகா படுகோனும் பிரபலமான ஜப்பானிய மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டை பயிற்சியை கற்றுக்கொண்டு நடித்துள்ளார்கள். அவையும் தத்ரூபமாக இருக்கும் என்று கூறியுள்ளார் சித்தார்த் ஆனந்த்.