தள்ளிப்போகிறது ஜிவி பிரகாஷின் இரண்டு படங்கள்? | பெண் கூறிய குற்றச்சாட்டுக்கு விஜய்சேதுபதி பதில் | '3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? |
சினிமாவில் எவ்வளவு வளர்ந்தாலும் தன்னடக்கத்துடன் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் ஒரு சிலர் தான். ஓரிரு படங்களில் நடித்த உடனே தனி மேனேஜர், பிஆர்ஓ என வைத்துக் கொண்டு தாம் தூம் என அட்டகாசம் செய்யும் நடிகர்கள், நடிகைகளும் இருக்கிறார்கள்.
'சிறைவாசி' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த மகாபாரதப் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் பெயரைக் கொண்ட நடிகர் ஓரிரு படங்களில்தான் நடித்துள்ளார். ஆனால், அதற்குள்ளாகவே அவரைத் தொடர்பு கொண்டால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார் என்று தான் பதில் வருகிறதாம்.
'ஆசிரியர்' படத்தில் நடித்த பிறகும் தற்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்த பின்னும் இப்போதே தன்னை டாப் நடிகர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டுள்ளாராம். இப்படியான பலரை தமிழ் சினிமா உலகம் பார்த்துவிட்டது. இப்படி ஆட்டம் போட்ட பலர் கடைசியில் சினிமாவைவிட்டே அப்பால் போய்விட்டார்கள் என்று அந்த நடிகரை நினைத்து சிலர் வருத்தப்படுகிறார்கள். புரிந்து கொள்வாரா நடிகர் ?.