எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
கடவுள் பெயர் கொண்ட படத்தையும், உலகத்திலேயே இல்லாத மிருகத்தின் பெயர் கொண்ட படத்தையும் இயக்கிய இயக்குனர், இரண்டு படங்களின் வெற்றியால் கொஞ்சம் ஓவராகவே போகிறார் என்கிறது சினிமா வட்டாரம். அவர் அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் படம்.
அந்த இரண்டு படங்களுக்கும் உதவி இயக்குனர்கள் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் சில பல கண்டிஷன்களைப் போட்டுள்ளார். அதுதான் கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுகளுக்குக் கூட இத்தனை கண்டிஷன்கள் போட மாட்டார்கள். இவர் இவ்வளவு போடுகிறாரே என்று கிண்டலடிக்கிறார்கள். அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த மிதப்பில் இருக்கிறாரோ என்கிறார்கள். பல வெற்றிகளைக் கொடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள். அதனால், அடக்கி வாசிக்க இயக்குனர் கற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வைக்கிறார்கள் சினிமாவின் சீனியர்கள்.