இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கடவுள் பெயர் கொண்ட படத்தையும், உலகத்திலேயே இல்லாத மிருகத்தின் பெயர் கொண்ட படத்தையும் இயக்கிய இயக்குனர், இரண்டு படங்களின் வெற்றியால் கொஞ்சம் ஓவராகவே போகிறார் என்கிறது சினிமா வட்டாரம். அவர் அடுத்து இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதில் ஒன்று முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கும் படம்.
அந்த இரண்டு படங்களுக்கும் உதவி இயக்குனர்கள் வேண்டும் என சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் சில பல கண்டிஷன்களைப் போட்டுள்ளார். அதுதான் கோலிவுட்டில் இப்போது பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வுகளுக்குக் கூட இத்தனை கண்டிஷன்கள் போட மாட்டார்கள். இவர் இவ்வளவு போடுகிறாரே என்று கிண்டலடிக்கிறார்கள். அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த மிதப்பில் இருக்கிறாரோ என்கிறார்கள். பல வெற்றிகளைக் கொடுத்தவர்கள் கூட பிற்காலத்தில் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்கள். அதனால், அடக்கி வாசிக்க இயக்குனர் கற்றுக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் வைக்கிறார்கள் சினிமாவின் சீனியர்கள்.