பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சீயான் நடிகரின் வாரிசுக்கு சமீபத்தில் திரைக்கு வந்த மூன்றெழுத்த படம், 'ஹிட்' அடித்ததை அடுத்து, புதிய படங்கள் அவரை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளன. இதன் காரணமாக, அந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடித்த மலையாள நடிகை, மேற்படி நடிகரை வளைத்துப் போட்டுக் கொண்டார். அவரை வைத்து கோலிவுட்டில் மார்க்கெட்டை பிடித்து விடலாம் என்று அடிக்கடி வாரிசு நடிகருடன், ஸ்டார் ஹோட்டலில், 'மீட்டிங்' போட்டு வந்தார்.
இந்த தகவல், சீயான் நடிகரின் காதுகளை எட்டியதை அடுத்து, மேற்படி நடிகைக்கு போன் செய்து, 'இனிமேலும் என் மகனை சந்திக்கும் தகவல் அறிந்தால், கோலிவுட் பக்கமே தலை காட்ட முடியாத அளவுக்கு வேலையை காட்டி விடுவேன்...' என்று, கடும் மிரட்டல் விடுத்துள்ளார். இதன் காரணமாக ஸ்டார் ஹோட்டலை காலி பண்ணி விட்டு சொல்லாமல் கொள்ளாமல் கேரளத்துக்கு ஓட்டம் பிடித்து விட்டார், மேற்படி நடிகை.