பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் இணைந்த ராஷி கண்ணா | தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ‛இட்லி கடை' முதல் பாடல் | மீண்டும் படம் தயாரித்து, நடிக்கப்போகும் சமந்தா | பெத்தி படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய ராம் சரண் | விஜய்க்கு அரசியல் கட்சி துவங்க தைரியம் வந்ததே இப்படித்தான் : பார்த்திபன் வெளியிட்ட தகவல் | 10 ஆண்டுகளாக சத்தமே இல்லாமல் சூர்யா செய்து வரும் உதவி | அரசியலில் விஜய் ஜெயிப்பது ரொம்ப கஷ்டம் : ரஜினி அண்ணன் சத்ய நாராயணா | அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரின் மேனேஜர் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சர்ச்சை பரவியது. அந்த நடிகருக்கு மட்டுமல்லாது, சில முன்னணி நடிகைகளுக்கும் அவர் மேனேஜர் ஆக இருக்கிறார். அவரிடம் உள்ள நடிகைகள் பற்றி நாளிதழ்கள், சமூக வலைத்தளங்கள், டிவி சானல்கள், என பாசிட்டிவ்வான செய்திகளை வரவழைப்பது அவர் வழக்கமாம். அது மட்டுமல்லாது பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளையும் அவர் தேடித் தருகிறாராம். அதனால், சில நடிகைகள் அவரை தங்களது மேனேஜர் ஆகப் பணி புரிய வைத்துள்ளார்கள்.
அதேசமயம், அவரிடமிருந்து விலகிச் செல்லும் நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் 'டிரோல்' செய்வதற்கும் மற்ற செய்தித் தளங்களில் செய்திகளை வரவழைக்கவும் ஆட்களை செட் செய்து வைத்துள்ளாராம். அதனால், அவர்களுக்கு புதிதாக நல்ல வாய்ப்புகள் கிடைக்காதபடி பார்த்துக் கொள்கிறாராம். இதுதான் அந்த மேனேஜர் பற்றி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக வந்த செய்தி.
தழிழில் ஒன்றிரண்டு வெற்றிப் படங்களில் நடித்த ஒரு நாயகி, அந்த மேனேஜர் வேண்டாமென விலகியுள்ளார். வெற்றிப் படங்களில் நடித்த பின்பும், அவர் தன்னை விட்டு விலகியதால் புதிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்காதபடி செய்துவிட்டாராம். இப்படித்தான் இதற்கு முன்பும் ஒரு மேனேஜர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது அவர் கைவசம் ஒரு நடிகை கூட இல்லை, நடிகர் கூட இல்லை என கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
அரசியலில் தீவிரமாக செயல்பட உள்ள நடிகர் தனது மேனேஜர் குறித்து தெரிந்து வைத்துள்ளாரா இல்லையா என்றும் கோலிவுட்டில் கேள்வி கேட்கிறார்கள்.