நடிக்க வைப்பதை விட நடிப்பது கடினம் : பாலாஜி சக்திவேல் | பிளாஷ்பேக் : தமிழ் மக்களை டிஸ்கோ பைத்தியம் பிடிக்க வைத்த படம் | பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? |
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தனது போட்டோ ஷூட்டில் நடந்த காமெடியான சம்பவம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் படு பிஸியாக நடிக்கும் இவர், மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டுக்காக இவர் செய்த காரியம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஜனனி நடத்திய அந்த போட்டோ ஷூட்டில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு சுவர் மீது ஏறி போஸ் கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் தவறி விழப்போக நல்லவேளையாக போட்டோகிராபர் பிடித்துக் கொள்கிறார். இந்த நகைச்சுவையான சம்பவத்தை வடிவேலு வாய்ஸூடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த சிலர் "தலைகீழாக தான் குதிக்கப் போகிறேன்", "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" என காமெடியன்களின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டு கலாய்த்துள்ளனர். ஜனனி இந்த கிண்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்.
ஒரு போட்டோவுக்காக இவ்வளவு அக்கப்போரா மேடம்?