பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தனது போட்டோ ஷூட்டில் நடந்த காமெடியான சம்பவம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் படு பிஸியாக நடிக்கும் இவர், மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டுக்காக இவர் செய்த காரியம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஜனனி நடத்திய அந்த போட்டோ ஷூட்டில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு சுவர் மீது ஏறி போஸ் கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் தவறி விழப்போக நல்லவேளையாக போட்டோகிராபர் பிடித்துக் கொள்கிறார். இந்த நகைச்சுவையான சம்பவத்தை வடிவேலு வாய்ஸூடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த சிலர் "தலைகீழாக தான் குதிக்கப் போகிறேன்", "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" என காமெடியன்களின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டு கலாய்த்துள்ளனர். ஜனனி இந்த கிண்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்.
ஒரு போட்டோவுக்காக இவ்வளவு அக்கப்போரா மேடம்?