பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார் தனது போட்டோ ஷூட்டில் நடந்த காமெடியான சம்பவம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகையான ஜனனி அசோக் குமார், நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் படு பிஸியாக நடிக்கும் இவர், மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடந்த ஒரு போட்டோ ஷூட்டுக்காக இவர் செய்த காரியம் தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. ஜனனி நடத்திய அந்த போட்டோ ஷூட்டில், ஹீல்ஸ் அணிந்து கொண்டு சுவர் மீது ஏறி போஸ் கொடுக்க முயற்சிக்கிறார். அப்போது பேலன்ஸ் கிடைக்காமல் தவறி விழப்போக நல்லவேளையாக போட்டோகிராபர் பிடித்துக் கொள்கிறார். இந்த நகைச்சுவையான சம்பவத்தை வடிவேலு வாய்ஸூடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
இதை பார்த்த சிலர் "தலைகீழாக தான் குதிக்கப் போகிறேன்", "பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மட்டம் வீக்" என காமெடியன்களின் பஞ்ச் டயலாக்கை பதிவிட்டு கலாய்த்துள்ளனர். ஜனனி இந்த கிண்டல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக எடுத்துக் கொள்கிறார்.
ஒரு போட்டோவுக்காக இவ்வளவு அக்கப்போரா மேடம்?