பிளாஷ்பேக் : நல்லதங்காள் போன்று பெண்களை கதற வைத்த 'பெண் மனம்' | நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் |
தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான சில திரைப்படங்கள் 1000 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளன. ஆனால், தமிழ் சினிமாவில் இன்னும் அந்த சாதனை நிகழ்த்தப்படவில்லை. எதிர்பார்க்கப்பட்ட சில படங்களும் 500 கோடி வசூலைக் கடந்து நின்றுவிடுகின்றன.
தெலுங்கு சினிமாவில் இப்படி 1000 கோடி வசூலிப்பதன் காரணம் என்ன என்பதைப் பற்றி ஐதராபாத்தில் நடந்த 'மதராஸி' பட நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.
“மதராஸி' படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ், பெரிய நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ்பாபு ஆகியோரை இயக்கியவர். அவருடன் நான் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியானது. இந்தப் படம் சிறப்பாக வந்துள்ளது. அனிருத் அற்புதமான பாடல்களையும், பின்னணி இசையையும் கொடுத்துள்ளார்.
திருப்பதி பிரசாத் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். 'கன்டென்ட்' சிறப்பாக இருந்தால் அவர் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார். அதனால்தான் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து 1000 கோடி என படங்கள் ஹிட் ஆகின்றன. 'மதராஸி' படத்திற்கும் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். நிச்சயம் இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும்,” என்று பேசியுள்ளார்.
தெலுங்கு சினிமாவிற்குச் சென்று அங்கு அவர்களைப் பாராட்டிப் பேசுவதில் தவறில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் 'கன்டென்ட்' நன்றாக இருந்தாலும் செலவு செய்வதில்லை என்று மறைமுகமாக சொல்வது போல் இருக்கிறதே?.