மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராட்சசன், ஜில்லா, கதை சொல்லப் போறோம், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இப்போது ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரையில் நாயகியாக நடித்தாலும் சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்கிறார் ரவீனா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பு தான் என் உயிர், அதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தேன். என் அம்மாவும் அதையே விரும்பினார். அதனால் மூன்று வயதில் இருந்து நடனம் கற்க ஆரம்பித்து 4 வயதில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் மேடையில் ஆடி, பின்னர் விளம்பர படங்களில் நடித்து, சின்னதிரைக்கு வந்தேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சின்னத்திரையில் இப்போது நாயகியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
என்றாலும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும், சினிமாவிலும் நாயகியாக சாதிக்க வேண்டும், ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சின்னத்திரை தொடர்கள் நீண்ட காலம் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடலாம். என்றாலும் சினிமாவில் நடித்தால்தான் ஒரு முழுமையான நடிகையாக முடியும். அதற்கான தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்வேன். என்கிறார் ரவீனா.