பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ராட்சசன், ஜில்லா, கதை சொல்லப் போறோம், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இப்போது ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரையில் நாயகியாக நடித்தாலும் சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்கிறார் ரவீனா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பு தான் என் உயிர், அதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தேன். என் அம்மாவும் அதையே விரும்பினார். அதனால் மூன்று வயதில் இருந்து நடனம் கற்க ஆரம்பித்து 4 வயதில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் மேடையில் ஆடி, பின்னர் விளம்பர படங்களில் நடித்து, சின்னதிரைக்கு வந்தேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சின்னத்திரையில் இப்போது நாயகியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
என்றாலும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும், சினிமாவிலும் நாயகியாக சாதிக்க வேண்டும், ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சின்னத்திரை தொடர்கள் நீண்ட காலம் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடலாம். என்றாலும் சினிமாவில் நடித்தால்தான் ஒரு முழுமையான நடிகையாக முடியும். அதற்கான தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்வேன். என்கிறார் ரவீனா.