மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ராட்சசன், ஜில்லா, கதை சொல்லப் போறோம், ஜீவா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ரவீனா தாஹா. இப்போது ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடிக்கிறார். சின்னத்திரையில் நாயகியாக நடித்தாலும் சினிமாவில் நாயகியாக நடித்து சாதிக்க வேண்டும் என்பதே தன் லட்சியம் என்கிறார் ரவீனா.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிப்பு தான் என் உயிர், அதுதான் என் வாழ்க்கை என்று முடிவு செய்திருந்தேன். என் அம்மாவும் அதையே விரும்பினார். அதனால் மூன்று வயதில் இருந்து நடனம் கற்க ஆரம்பித்து 4 வயதில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் மேடையில் ஆடி, பின்னர் விளம்பர படங்களில் நடித்து, சின்னதிரைக்கு வந்தேன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சின்னத்திரையில் இப்போது நாயகியாக நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது.
என்றாலும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரவேண்டும், சினிமாவிலும் நாயகியாக சாதிக்க வேண்டும், ஆங்கில இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. சின்னத்திரை தொடர்கள் நீண்ட காலம் ஒளிபரப்பாவதால் மக்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து விடலாம். என்றாலும் சினிமாவில் நடித்தால்தான் ஒரு முழுமையான நடிகையாக முடியும். அதற்கான தகுதியை நான் இன்னும் வளர்த்துக் கொள்வேன். என்கிறார் ரவீனா.