நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

பெங்களூரை சேர்ந்தவர் கவிதா கவுடா. தமிழில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரின் மூலம் அறிமுகமான இவர், அதன் பிறகு நீலி, மகராசி உள்பட பல சீரியல்களில் நடித்தார். கன்னடத்தில் ஒளிபரப்பான லட்சுமி பிரம்மா என்ற தொடரின் மூலம் அங்கு பிரபலமான நடிகை ஆனார். ஸ்ரீனிவாசா கல்யாணம், பர்ஸ்ட் லவ் உள்பட பல கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கன்னட பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
கடைசியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனாட்சியாக நடித்தார். கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது கன்னடத்தில் குக் வித் கிறுக்கு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடன் பல சீரியல்களில் இணைந்து நடித்து வந்த சந்தன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் நடந்தது. தற்போது இருவருக்கும் பெங்களூருவில் எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. தனது திருமண புகைப்படங்களை கவிதா கவுடா வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.