நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

தேன்மொழி பி.ஏ., சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்த வந்த குட்டி ரமேஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது மறைவு சின்னத்திரை உலக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேன்மொழி பி.ஏ சீரியல் நாயகியான ஜாக்குலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛அப்பா குட்டி ரமேஷின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. உங்களை நான் மிஸ் செய்வேன். எனக்கும், அப்பாக்களுக்கும் ராசியே இல்லை என்று மிகுந்த மனவேதனையுடன் செய்தி வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.
அதேப்போல் குட்டி ரமேஷின் மற்றொரு மகளாக நடித்துள்ள கம்பம் மீனாவும் இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தி பதிவிட்டுள்ளார். அதில், அய்யோ கடவுளே என்ன கொடுமை இது. ரமேஷ் சார் எப்பவுமே சுறுசுறுப்பாக கலகலப்பாக இருப்பீங்களே. நீங்க சரியாகி வந்திருவீங்கன்னு முழு நம்பிக்கையோடு இருந்தோமே. மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம், பேஸ்புக்குல போடுங்க, இன்ஸ்டால போடுங்கனு சொல்வீங்களே ரமேஷ் சார். எத்தனை லைக் வந்துருக்கு, என்னென்ன கமெண்ட் வந்திருக்குன்னு கேட்பீங்களே சார். உங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் சார் என்று அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப் படத்துடன் தெரிவித்துள்ளார் கம்பம் மீனா.