என்னது, ஸ்ருதிநாராயணன் படத்துக்கு தியேட்டர் கிடைக்கலையா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தின் கதையை இருவேறு காலங்களில் இயக்கிய இயக்குநர் | 'பென்ஸ்' படத்தில் இணையும் ஹரிஷ் கல்யாண், மூன்று நாயகிகள் | ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' |
தேன்மொழி பி.ஏ., சீரியலில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்த வந்த குட்டி ரமேஷ், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் மாரடைப்பால் இறந்து விட்டார். அவரது மறைவு சின்னத்திரை உலக அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேன்மொழி பி.ஏ சீரியல் நாயகியான ஜாக்குலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‛‛அப்பா குட்டி ரமேஷின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. நல்ல மனிதராகவும், அப்பாவாகவும் இருந்த நீங்கள் இல்லாதது வருத்தமாக உள்ளது. உங்களை நான் மிஸ் செய்வேன். எனக்கும், அப்பாக்களுக்கும் ராசியே இல்லை என்று மிகுந்த மனவேதனையுடன் செய்தி வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.
அதேப்போல் குட்டி ரமேஷின் மற்றொரு மகளாக நடித்துள்ள கம்பம் மீனாவும் இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தி பதிவிட்டுள்ளார். அதில், அய்யோ கடவுளே என்ன கொடுமை இது. ரமேஷ் சார் எப்பவுமே சுறுசுறுப்பாக கலகலப்பாக இருப்பீங்களே. நீங்க சரியாகி வந்திருவீங்கன்னு முழு நம்பிக்கையோடு இருந்தோமே. மீனாம்மா வாங்க டிக்டாக் பண்ணலாம், பேஸ்புக்குல போடுங்க, இன்ஸ்டால போடுங்கனு சொல்வீங்களே ரமேஷ் சார். எத்தனை லைக் வந்துருக்கு, என்னென்ன கமெண்ட் வந்திருக்குன்னு கேட்பீங்களே சார். உங்க ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் சார் என்று அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப் படத்துடன் தெரிவித்துள்ளார் கம்பம் மீனா.