ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? | மஞ்சு வாரியரா? காவ்யா மாதவனா? : பெண் நடுவரை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகர் | ஸ்ரீதேவிக்கு ராம் கோபால் வர்மா கொடுத்த ‛டயட் டார்ச்சர்' : சால்பாஸ் இயக்குனர் பகீர் குற்றச்சாட்டு | படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் |
விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலினிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு. சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடிக்கும் ஆசையில் சின்னத்திரையில் தோன்றுவதிலிருந்து கொஞ்சம் ப்ரேக் விட்டிருந்தார். ஆனால், பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 8 துவங்கிய போது முதல் ஆளாக துண்டு போட்டு வந்துவிட்டார். அதற்கேற்றார்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஜாக்குலினுக்கு மக்களின் பேராதரவு கிடைத்தது. 15 முறை எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி 15 முறையும் மக்களால் அதிக வாக்களிக்கப்பட்டு காப்பாற்ற பெற்ற ஒரே பிக்பாஸ் போட்டியாளர் என்ற சாதனையையும் ஜாக்குலின் படைத்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் டைட்டில் வின்னராகவோ, டாப் 3 இடத்திலோ ஜாக்குலின் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கின் போது அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது ஜாக்குலின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்தது. இந்நிலையில், பிக்பாஸ் கிராண்ட் பினாலேவின் ஜாக்குலினின் பயண வீடியோ ஒளிபரப்ப பட்டபோது நேயர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். ஜாக்குலினுக்காக பலர் அழுதனர். இதைபார்த்து எமோஷ்னல் ஆன ஜாக்குலின், மக்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நன்றியினை தெரிவித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.