மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடர் திடீரென முடிவுக்கு வந்தது. தான் ஹீரோயினாக நடித்து வந்த தொடர் பாதியிலேயே முடிவுக்கு வந்துவிட்டதால் ரேஷ்மா முரளிதரன் மிகவும் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நாயகன் ஜெய் ஆகாஷ் 'நான் இல்லாததால் கதை விறுவிறுப்பாக செல்லவில்லை. எனக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைக்கவும் சீரியல் குழுவினர் ஒத்துக் கொள்ளாததால் சீரியலை பாதியிலேயே முடித்து வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது' என்று கூறியிருந்தார்.
இதனை பார்த்த ரேஷ்மாவின் ரசிகர்கள் 'நீங்கள் இல்லாததால் சீரியல் இண்ட்ரஸ்டிங்கா இல்லை என்று யார் சொன்னது? ரொம்ப ஓவரா தற்பெருமை பேசாதீங்க' என்று பதிலடி கொடுத்தனர். பதிலுக்கு ஜெய் ஆகாஷ் ரசிகர்களும் ரேஷ்மாவை திட்டியும் அவரது ரசிகர்களிடம் சண்டையிட்டும் வருகின்றனர்.
ஒருகட்டத்தில் மிகவும் கடுப்பான ரேஷ்மா, 'உங்களுக்கு நடந்த உண்மை தெரியவில்லை என்றால் தயவு செய்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். இந்த தொடர் எதற்காக முடிவுக்கு வந்தது என்பதை இதில் பணியாற்றிய அனைவரும் அறிவர். இதில் என்னுடைய தவறோ, எங்கள் டீமின் தவறோ எதுவுமில்லை. என்னையும் எனது பேன் பேஜ்களையும் அட்டாக் செய்வதால் உண்மை மாறப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக இருங்கள் ஆனால், விஷமத்தை பரப்பாதீர்கள்' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.