பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தளர்வில்லாத ஊரடங்கு அடுத்த ஒரு வாரத்திற்கு கடைபிடிக்கப்பட உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பே சினிமா மற்றும் டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதற்கு முன்பு வரை நடைபெற்ற சில படப்பிடிப்புகளின் காரணமாக கொரோனா தொற்றால் பலர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் மரணம் அடைந்தும் விட்டனர்.
சென்னையில் உள்ள தனியார் ஸ்டுடியோவில் ஊரடங்கை மீறி நடைபெற்ற மலையாள 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டு அரங்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது.
கடந்த வருடம் கொரோனா பாதிப்பின் போது படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட போது டிவி நிகழ்ச்சிகள், தொடர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சில மாதங்களுக்கு பழைய நிகழ்ச்சிகளையே திரும்பவும் ஒளிபரப்பினார்கள். அதே போன்று இந்த வருடமும் ஆரம்பமாகிவிட்டது.
சில டிவிக்களில் முக்கிய ஷோக்களை மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். சில தொடர்களைத் தொகுத்து ஒளிரப்பு செய்து வருகிறார்கள். இன்னும் இரண்டு வார காலத்திற்காவது ஊரடங்கு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் டிவி நிகழ்ச்சிகளில் 'ரிபீட்'களைத்தான் அதிகம் பார்க்க வேண்டியதிருக்கும்.