சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ் சினிமாவில் பிரபல டப்பிங் கலைஞராக இருப்பவர் ரவீணா ரவி. ‛ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் விதார்த்தின் ஜோடியாக நடித்ததன் மூலம் நடிகையாகவும் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து ‛லவ் டுடே' மற்றும் ‛மாமன்னன்' ஆகிய படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது பல படங்களில் தொடர்ந்து நடித்தும் வருகிறார் ரவீணா ரவி. இந்தநிலையில் மலையாள இயக்குனர் ஜோ ஜார்ஜ் என்பவர் தான் இயக்கியுள்ள ‛ஆசாதி' என்கிற திரைப்படத்தில் ரவீணா ரவிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார். பிரபல நடிகை வாணி விஸ்வநாத் போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ரவீணா ரவி, வாய் பேச முடியாத ஒரு சிறை கைதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இது பற்றி ரவீணா ரவி கூறும்போது, “மாமன்னன், லவ் டுடே படங்களை பார்த்து விட்டு தான் இயக்குனர் ஜோ ஜார்ஜ் என்னை இந்த படத்தில் நடிக்க அழைத்தார். இந்த படத்தில் முதலில் என்னுடைய கதாபாத்திரம் பேசும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் என் கதாபாத்திரத்தின் மீது இரக்கம் வரவேண்டும் என்பதற்காக வாய் பேசாத மற்றும் ஒரு கர்ப்பிணி கதாபாத்திரமாக அது மாற்றப்பட்டு விட்டது.
வாணி விஸ்வநாத் போன்ற சீனியர் நடிகருடன் அதிக காட்சிகளில் நடிக்க வேண்டுமே, என்ன செய்யப் போகிறேன் என நினைத்த சமயத்தில் தான் இயக்குனர் இப்படி என்னை பேசாமலேயே நடிக்க வைத்ததால், அப்பாடா தப்பித்தேன் என்கிற உணர்வு ஏற்பட்டது” என்று கூறியுள்ளார் ரவீணா ரவி. எல்லோருக்காகவும் தொடர்ந்து கணீரென டப்பிங் குரல் கொடுத்து வரும் ரவீணா ரவிக்கு வாய் பேசாத கதாபாத்திரம் என்பது ஒரு சவாலான விஷயமாகத்தான் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.