ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழ் சீரியல் நடிகரான விஷ்ணுகாந்த் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சிப்பிக்குள் முத்து, என்றென்றும் புன்னகை ஆகிய தொடர்களில் நடித்திருக்கிறார். சக நடிகையான சம்யுக்தாவை திருமணம் செய்து கொண்ட அவர் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களிலேயே பிரிந்துவிட்டார். அதன் பின் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்த விஷ்ணுகாந்த் தெலுங்கில் குண்டேநிண்டா குடிகண்டலு என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக வித்யா நம்பர் 1 தொடரில் நடித்த தேஜஸ்வினி கவுடா நடித்து வருகிறார். தற்போது இவருக்கு தெலுங்கிலும் ரசிகர் கூட்டம் உள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் தோசை மாவில் சாரி என எழுதி மன்னிப்பு கேட்கும் விஷ்ணுகாந்த்தின் பதிவு இணையத்தில் வைரலானது. அவர் யாரிடம் மன்னிப்பு கேட்கிறார் என ரசிகர்கள் குழம்ப, அந்த பதிவில் விஷ்ணுகாந்தின் கெட்டப் பாலு கதாபாத்திரம் போல் உள்ளதால், சீரியல் படப்பிடிப்பிற்காக எடுத்த வீடியோவை தான் விஷ்ணுகாந்த் வெளியிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.