இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தமிழ் சின்னத்திரையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் யுவராஜ் நேத்ரன். விஜய் டிவியில் ஒளிபரப்பான பாய்ஸ் வெசஸ் கேர்ஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இவரது மனைவி தீபாவும், மூத்தமகள் அபிநயாவும் கூட சீரியல்களில் நடித்து வருகிறார்கள். கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரஞ்சிதமே தொடரில் சிறப்பாக நடித்து வந்த நேத்ரன் திடீரென சீரியலை விட்டு விலகினார். இதற்கான காரணம் பலருக்கும் தெரியாதிருந்த நிலையில், நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரமடைந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதும், அப்போது கல்லீரலிலும் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் தற்போது தெரியவந்துள்ளது.
நேத்ரனின் தற்போதைய உடல்நிலை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அபிநயா தனது தந்தை சீக்கிரம் குணமாக பிரார்த்தனை செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் நேத்ரன் பூரண நலம் பெறுவார் மீண்டும் சீரியல் நடிப்பார் என நேத்ரனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.