திரையுலகில் 47 ஆண்டுகளைக் கடந்த சிரஞ்சீவி | மோகன்லாலுக்கு மலையாளத்தில் வாழ்த்து தெரிவித்த அமிதாப்பச்சன் | 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'ரவுடி பேபி' | 'லடாக்' படப்பிடிப்பில் சல்மான்கானின் காயம் ; படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தம் | செப்டம்பர் 26ல் மீண்டும் இத்தனை படங்கள் வெளியீடா? | கவுதம் கார்த்திக்கின் 'ரூட்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | இப்போதைக்கு ஓடிடியில் லோகா ஒளிபரப்பாகாது ; துல்கர் சல்மான் திட்டவட்டம் | மூணாறு படப்பிடிப்பில் நடிகர் ஜோஜூ ஜார்ஜ் ஜீப் விபத்தில் காயம் | பத்மஸ்ரீ விருதை விட சல்மான்கான் படத்தை இயக்கியது தான் பெரிய சாதனை ; பிரியதர்ஷன் | சக்தித் திருமகன், கிஸ் படங்களின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? |
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நேத்ரன். கடைசியாக ரஞ்சிதமே தொடரில் நடித்து வந்தார். புற்றுநோய் காரணமாக சீரியலை விட்டு விலகிய அவர் கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.
நேத்ரனின் மனைவி தீபா ஆவார். இவர் பிரபல டிவி நடிகையாக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். தீபா தற்போது 'சிங்கப்பெண்ணே' உள்ளிட்ட தொடர்களில் நடிக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் அபிநயா, ‛கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப்சீரிஸில் நடித்தார். தனது தந்தை நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அபிநயா தான் சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாவில் அறிவித்தார். தொடர்ந்து தனது தந்தைக்கு மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றியும் பதிவிட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட சீரியல் நடிகர் வருண் உதய் மற்றும் கார்த்திக் சசிதரனுடன் டான்ஸ் ஆடியும், காமெடி ரீல்ஸ் செய்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் நேத்ரன். இந்நிலையில் அவரது மரண செய்தி சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.