மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நேத்ரன். கடைசியாக ரஞ்சிதமே தொடரில் நடித்து வந்தார். புற்றுநோய் காரணமாக சீரியலை விட்டு விலகிய அவர் கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.
நேத்ரனின் மனைவி தீபா ஆவார். இவர் பிரபல டிவி நடிகையாக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். தீபா தற்போது 'சிங்கப்பெண்ணே' உள்ளிட்ட தொடர்களில் நடிக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் அபிநயா, ‛கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப்சீரிஸில் நடித்தார். தனது தந்தை நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அபிநயா தான் சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாவில் அறிவித்தார். தொடர்ந்து தனது தந்தைக்கு மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றியும் பதிவிட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட சீரியல் நடிகர் வருண் உதய் மற்றும் கார்த்திக் சசிதரனுடன் டான்ஸ் ஆடியும், காமெடி ரீல்ஸ் செய்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் நேத்ரன். இந்நிலையில் அவரது மரண செய்தி சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.