அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி |
பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தவர் நேத்ரன். கடைசியாக ரஞ்சிதமே தொடரில் நடித்து வந்தார். புற்றுநோய் காரணமாக சீரியலை விட்டு விலகிய அவர் கடந்த சில மாதங்களாக அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேத்ரன் நேற்று உயிரிழந்தார்.
நேத்ரனின் மனைவி தீபா ஆவார். இவர் பிரபல டிவி நடிகையாக உள்ளார். இருவரும் காதலித்து திருமணம் செய்தனர். தீபா தற்போது 'சிங்கப்பெண்ணே' உள்ளிட்ட தொடர்களில் நடிக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தவர் அபிநயா, ‛கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப்சீரிஸில் நடித்தார். தனது தந்தை நேத்ரனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை அபிநயா தான் சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாவில் அறிவித்தார். தொடர்ந்து தனது தந்தைக்கு மேற்கொண்ட சிகிச்சைகள் பற்றியும் பதிவிட்டு வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு கூட சீரியல் நடிகர் வருண் உதய் மற்றும் கார்த்திக் சசிதரனுடன் டான்ஸ் ஆடியும், காமெடி ரீல்ஸ் செய்தும் வீடியோ வெளியிட்டிருந்தார் நேத்ரன். இந்நிலையில் அவரது மரண செய்தி சின்னத்திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.