அட்லி - அல்லு அர்ஜுன் படத்தில் மூன்று ஹீரோயின்கள்? | இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி |
சின்னத்திரை நடிகரான நேத்ரன் சில தினங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்நிலையில், சக நடிகரும் நண்பருமான வருண் உதய் நேத்ரன் குறித்து உருக்கமான சில செய்திகளை கூறியிருக்கிறார். அவர் பேசியபோது, 'நேத்ரனுடன் நான் பல சீரியல்களில் இணைந்து நடித்துள்ளேன். சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படமாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் முன்னேறி வந்தார். நேத்ரனுக்கு சொந்த வீடு கூட கிடையாது. அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார். அவருக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க வருவதாக சொன்னோம். ஆனால், மறுத்துவிட்டார். ஆனால், சில தினங்களுக்கு முன் அவரது மகள் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு அழைத்தார். அவருக்கு உடநிலை சரியில்லாமல் இருந்தால் கூட அனைவருக்கும் மோடிவேஷ்னலாக பாசிட்டிவாக மெசேஜ் அனுப்புவார். ஆனால், அவரது மொபைலிலிருந்து அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி வந்தது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.