அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும், விஷ்ணுகாந்தும் திருமணம் செய்து பிரிந்து சென்ற பின் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகின்றனர். சம்யுக்தா, விஷ்ணுகாந்தை ஒரு காமக்கொடூரன் என்கிற ரேஞ்சில் சித்தரித்து வீடியோ வெளியிட, கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஆடியோவை வெளியிட்டு அவரது தவறுகளை அம்பலப்படுத்தினார். அதன்மீதான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத சம்யுக்தா தன்னை பாதிக்கப்பட்டவராக காண்பித்துக் கொள்ள ஆண் வர்க்கமே இப்படி தான் என கூறி வருகிறார்.
இந்நிலையில், பிரச்னையிலிருந்து முழுமையாக வெளிவந்துவிட்ட விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராமில், சம்யுக்தாவுடனான திருமண வாழ்க்கை பொய்யான நரக வாழ்க்கை என்றும், அதிலிருந்து தன்னை இயற்கையும் இறைவனும் மீட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த கடினமான தருணத்தில் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் ஆதரவு தெரித்து வருவதுடன் விஷ்ணுகாந்த் பக்கமிருக்கும் நியாயத்தை புரிந்துகொண்டதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.