மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இறுதிபோடிக்கான பட்டியலில் அக்ஷயா, ஜீவன் பத்ககுமார்,புருஷோத்தமன், லக்ஷனார் ஆகிய நான்கு பேர் மட்டுமே இதுவரை இடம்பிடித்துள்ளனர். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நாகார்ஜுனா இடம்பெறவில்லை. நாகார்ஜுனா ஏழ்மையான மீனவ குடும்பத்தில் பிறந்தவர். லுங்கி அணிந்து மேடையேறிவர். கேள்வி ஞானத்தில் மட்டுமே பாடல் பாடும் திறமையை வளர்ந்து கொண்டவர். அதேசமயம் அவர் பாடுவதை பார்த்து ஹரிஹரன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்களே அசந்து போய் பாராட்டியுள்ளனர். மேலும், மக்களின் ஆதரவும் அதிகம் இருக்கிறது.
இந்நிலையில், அவர் பைனல் லிஸ்ட் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியொரு நபர் இந்த அளவிற்கு வெற்றி பெற்று வந்திருக்கிறார் என்றால் அதற்காகவே அவருக்கு பைனலில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கலாம்! என மக்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். நாகார்ஜுனா பைனலில் பாடுவாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை சரிவர தெரியவில்லை என்றாலும், 5-வது பைனலிஸ்டாக அவர் கட்டாயம் இடம்பெறுவார் என மக்கள் நம்பி வருகின்றனர்.