மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகர்கள் சம்யுக்தாவும் விஷ்ணுகாந்தும் காதலித்து திருமணம் செய்த வேகத்திலேயே பிரிந்துவிட்டார்கள். தங்களுக்கு இடையேயான பிரச்னை குறித்து பொதுவெளியில் மாறி மாறி பேசி ஒருவரையொருவர் குற்றம் சொல்லி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் இவர்களின் சண்டை தற்போது அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லி அனுதாபம் தேடும் நிலைக்கு சென்றுவிட்டது.
அதில் உச்சபட்சமாக ப்ரீயட்ஸ் டைமில் கூட விஷ்ணுகாந்த் தன்னை டார்ச்சர் செய்வதாகவும், 24 மணி நேரமும் ரொமான்ஸ் செய்வதிலேயே குறியாக இருப்பார் என்றும் சம்யுக்தா பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதற்கு விஷ்ணுகாந்தும் தனது தரப்பு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதை பார்த்து கடுப்பான மக்கள் அனுதாபத்தை பெறுவதற்காக தனிப்பட்ட அந்தரங்கத்தை பொதுவெளியில் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? என இருவரையும் லெப்ட் ரைட் வாங்கி வருகின்றனர்.