மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்வேதா. இந்த சீரியலில் பள்ளி செல்லும் நாயகி தமிழ்ச்செல்விக்கு காதல் விவகாரத்தால் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைக்கின்றனர். அதுபோலவே தனது நிஜ வாழ்விலும் பள்ளி படிக்கும் போது பல லவ் டார்ச்சர்களை சந்தித்ததாக ஸ்வேதா கூறியுள்ளார்.
'பள்ளியில் படிக்கும் போது ஒரு பையன் எனக்கு பேனா கொடுத்ததை பார்த்து பொறாமை பட்ட இன்னொரு பையன், நம்ம கல்யாணத்துக்கு நான் சீட்டு போட்டு வச்சுருக்கேன், நீ அவன்கிட்ட பேசுறியேன்னு கேட்டான். இன்னொருவன் பிரின்ஸிபால் ரூம் பக்கத்தில் என்னுடைய பெயரையும் அவனின் பெயரையும் எழுதி வைத்திருந்தான். அதேபோல இன்னொருவன் கையை அறுத்துக்கொண்டு வாட்சப்பில் போட்டோ அனுப்பினான்' என்று தனக்கு வந்த லவ் புரொபோஸல்கள் குறித்து அந்த பேட்டியில் கலகலப்பாக கூறியுள்ளார். இந்த பேட்டியை பார்க்கும் ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தங்களது புரொபோஸல்களையும் தெரிவித்து வருகின்றனர்.