300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
சின்னத்திரை நடிகர்களில் ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளனர் சஞ்சீவ் - ஆல்யா மானசா தம்பதியினர். சஞ்சீவ் தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் தொடரில் ஹீரோவாகவும், ஆல்யா மானசா இனியா தொடரில் ஹீரோயினாகவும் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது பிரபலத்தை பயன்படுத்தி இணையத்தில் நூதன மோசடி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
அதாவது ஆல்யா சில தினங்களுக்கு ஒரு பேட்டியில் ஆல்யா மானசா தொகுப்பாளர் அஸ்வத்திடம் ஒரு டிரேடிங் கம்பெனியில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்று சொல்வதை போலவும், அந்த தொகுப்பாளர் தனக்கு உடனடியாக ஆயிரக்கணக்கில் லாபம் கிடைத்துவிட்டது என்று கூறுவதை போலவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த லைவ் நிகழ்ச்சியை ஆர்பிஐ தலையிட்டு நிறுத்திவிட்டது போலவும் பரபரப்பாக தலைப்பு வைத்து வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மோசடி குறித்து அறிந்த சஞ்சீவ் மற்றும் ஆல்யா உடனடியாக அந்த லிங்கை தங்களது ஸ்டோரியில் வைத்து இது பொய்யான மற்றும் பணமோசடி தொடர்பான செய்தி என எச்சரித்துள்ளனர்.