ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்துக்கு (அம்மா) சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மலையாள நடிகர் சங்க வரலாற்றில் பெண் ஒருவர் தலைவரானது இதுதான் முதன்முறை.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஸ்வேதா மேனன் கடந்த காலங்களில் பல்வேறு பிரச்னைகள், மனகசப்புகள் காரணமாக சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்பி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது "சங்கத்தில் இருந்து விலகியவர்கள் மீண்டும் திரும்ப வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட நடிகை, சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தார். அவர் உள்பட ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் வந்தால் நான் தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியடைவேன். ஆனால், விலகியவர்களை சேர்ப்பது முக்கிய பணி அல்ல. அதைவிட முக்கியமான பணிகள் காத்திருக்கிறது. என்றாலும் சென்றவர்கள் திரும்பி வருவதற்கு நடிகர் சங்கத்தின் வாசல் திறந்தே இருக்கும்" என்கிறார் ஸ்வேதா.